7 12 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் புலம்பெயர்ந்தோரை கைதிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பம்

Share

கனடாவில் புலம்பெயர்ந்தோரை கைதிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பம்

புலம்பெயர்ந்தோரை, குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், கனேடிய நீதிமன்றம் ஒன்று முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.

கனடாவில், 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் மட்டும், 8,360 புலம்பெயர்ந்தோர் கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சியால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அப்படி அவர்கள் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர ஒன்ராறியோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர், குற்றவாளிகளைப் போல குற்றவாளிகளுடன், கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டு, எங்கும் செல்லவோ, யாரையும் சந்திக்கவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொடூரமான குற்றம் செய்தவர்களுடன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார் நீதிபதி Benjamin Glustein.

அப்படி இந்த புலம்பெயர்ந்தோர் வழக்குத் தொடர்வதைத் தடுப்பதற்காக, பெடரல் அரசு சார்பில் சட்டத்தரணிகள் 15 எதிர்ப்புகள் அல்லது மறுப்புகள் தெரிவித்த நிலையில், அவற்றை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...