7 8 1 scaled
உலகம்செய்திகள்

இம்ரானின் உயிருக்கு ஆபத்து; மனைவி கோரிக்கை

Share

இம்ரானின் உயிருக்கு ஆபத்து; மனைவி கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, அட்டாக் சிறையில் அவருக்கு விஷம் வைத்து கொல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புஷ்ரா பீபி பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில், தனது கணவர் இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அவரை அட்டாக் சிறையில் இருந்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலாவுக்கு மாற்ற வேண்டும் என்றும் புஷ்ரா பீபி கோரினார்.

“எந்தவித நியாயமும் இல்லாமல் எனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டப்படி எனது கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்” என புஷ்ரா பீபி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

70 வயதான பிடிஐ தலைவரின் சமூக மற்றும் அரசியல் நிலையை கருத்தில் கொண்டு, சிறையில் பி வகுப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும். அட்டாக் சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்பட வாய்ப்புள்ளது. அவர் இரண்டு கொலை முயற்சிகளை சந்தித்துள்ளார். அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இம்ரானின் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. தான் பயப்படுவதாக அந்த கடிதத்தில் புஷ்ரா பீபி குறிப்பிட்டுள்ளார்.

தோஷகானா ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் இம்ரான் கான் குற்றவாளி என அறிவித்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அவரை அடியாலா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பொலிஸார் அவரை கட்டி வைத்து சிறையில் அடைத்தனர். இம்ரான் ஆகஸ்ட் 5-ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஆட்சியில் இருந்தபோது வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க பரிசுப் பொருட்களை விற்றது தோஷ கானா வழக்கு.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...