உலகம்செய்திகள்

சட்டவிரோத திருமணத்தால் இம்ரான் கானின் 3வது மனைவி கைது! இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Share

சட்டவிரோத திருமணத்தால் இம்ரான் கானின் 3வது மனைவி கைது! இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மூன்றாவது மனைவி சட்டவிரோத திருமணம் செய்ததாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8ஆம் திகதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் மூன்றாவது வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.

அவர் புஷ்ரா பீபியை மூன்றாவது திருமணம் செய்தது சட்டவிரோதமானது என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தற்போது இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் புஷ்ரா பீபியை இம்ரான் கான் கரம் பிடித்தார். ஆனால் புஷ்ராவின் முன்னாள் கணவரான Khawar Maneka, கடந்த ஆண்டு தனது மனைவி மறுமணம் செய்வதற்கு முன், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தேவையான மூன்று மாத இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை என குற்றம்சாட்டி இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் விசாரணை முடிவிலேயே தற்போது இம்ரான் கான், புஷ்ராவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது இம்ரான் கானுக்கு மூன்றாவது மற்றும் புஷ்ராவுக்கு இரண்டாவது தண்டனை ஆகும்.

ஏற்கனவே, பரிசாக வந்த பொருட்களை முறைகேடு செய்த வழக்கில் இம்ரான் கானும், புஷ்ரா பீபியும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.

அத்துடன் சைபர் கேபிள் முறைகேட்டில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...