8 26
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள இம்ரான் கான்

Share

பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள இம்ரான் கான்

பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகத்தினல் ஒன்றான ஆக்ஸ்போர்ட்(Oxford) பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan) விண்ணப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ள நிலையில், இந்த தகவலை அவரது பாகிஸ்தான் தீரிகே-இ-இன்சாப் (PTI) கட்சியின் லண்டன் அடிப்படையிலான பேச்சாளர் சையத் சுல்பிகார் புகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், “இம்ரான் கான் தனது குழுவிற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு அளித்தார். விண்ணப்பத்தின் பரிசீலனை தற்போது நடைபெறுகிறது.

இது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். இம்ரான் கான் போன்ற பாரிய பெயர் ஒரு வேந்தராக தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்தது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் படி, வேந்தர் பதவிக்கான 10 வருட காலத்திற்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் பட்டியல் ஒக்டோபரில் வெளியிடப்படும், மேலும் வாக்குப்பதிவு மாத இறுதியில் நடைபெறும்.

பிரித்தானிய ஊடகங்களின் படி, முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் வில்லியம் ஹேக் மற்றும் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையாளர் பீட்டர் மாண்டல்சன் போன்ற பிரபலங்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் இம்ரான் கான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தரானால், இப்பதவியை வகிக்கும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராக இருப்பார்.

இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, ஆசியா மற்றும் உலகம் முழுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...