உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள இம்ரான் கான்

Share
8 26
Share

பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள இம்ரான் கான்

பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகத்தினல் ஒன்றான ஆக்ஸ்போர்ட்(Oxford) பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan) விண்ணப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ள நிலையில், இந்த தகவலை அவரது பாகிஸ்தான் தீரிகே-இ-இன்சாப் (PTI) கட்சியின் லண்டன் அடிப்படையிலான பேச்சாளர் சையத் சுல்பிகார் புகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், “இம்ரான் கான் தனது குழுவிற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு அளித்தார். விண்ணப்பத்தின் பரிசீலனை தற்போது நடைபெறுகிறது.

இது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். இம்ரான் கான் போன்ற பாரிய பெயர் ஒரு வேந்தராக தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்தது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் படி, வேந்தர் பதவிக்கான 10 வருட காலத்திற்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் பட்டியல் ஒக்டோபரில் வெளியிடப்படும், மேலும் வாக்குப்பதிவு மாத இறுதியில் நடைபெறும்.

பிரித்தானிய ஊடகங்களின் படி, முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் வில்லியம் ஹேக் மற்றும் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையாளர் பீட்டர் மாண்டல்சன் போன்ற பிரபலங்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் இம்ரான் கான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தரானால், இப்பதவியை வகிக்கும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராக இருப்பார்.

இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, ஆசியா மற்றும் உலகம் முழுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...