உலகம்செய்திகள்

இலங்கை போன்ற நிலைமைக்கு பாகிஸ்தான் மாறும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

tamilni 290 scaled
Share

இலங்கை போன்ற நிலைமைக்கு பாகிஸ்தான் மாறும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இலங்கையை போன்ற நிலைக்கு செல்லும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இருக்கும் இம்ரான் கான் பத்திரிகையாளர்களிடம் உரையாடினார்.

அப்போது அவர் 2024 பொதுத்தேர்தலை மீண்டும் சாடினார். உரிமை ஆணையைத் திருடுவதன் மூலம் நாட்டின் நம்பிக்கைகள் சிதைந்துவிட்டது. இதனால் பாகிஸ்தானில் இலங்கை போன்ற நிலைமை ஏற்படும் என்று கூறினார்.

தனது கணிப்புகள் அனைத்தும் உண்மையாகிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் இறுதிக் கட்டக் கடனை பெறப்போகிறது மற்றும் பணவீக்கத்தை புதிய அலைக்குப் பிறகு நாடு வீதிக்கு செல்லும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், தற்போதைய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று கூறிய இம்ரான் கான், பாதுகாப்பு அச்சுறுத்தல், தேர்தல் பொய்யானது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதுடன் மோசடிக்கு எதிராக அமைதியான போராட்டங்களை தங்கள் கட்சி தொடரும் என்றும் இம்ரான் கான் கூறினார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...