25 14
உலகம்செய்திகள்

பணவீக்கத்துக்கு எதிரான போரில் வெற்றி! மத்திய கிழக்கு போரினால் அபாயம் – ஐஎம்எப்

Share

பணவீக்கத்துக்கு எதிரான போரில் வெற்றி! மத்திய கிழக்கு போரினால் அபாயம் – ஐஎம்எப்

உலகின் சில நாடுகளில் விலை அழுத்தங்கள் நீடித்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் துறையின் இயக்குநருமான பியர் ஒலீவியர் கோலீஞ்சஸ்( Pierre-Olivier Gourinchas )இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தப் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் குறையும் என்றும் அவர் எதிர்வை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பணவீக்கம் 9.4 சதவீதமாக உயர்ந்த நிலையிலேயே தற்போதைய சரிவு உணரப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்த பணவீக்கம் போக்கு 3.2 சதவீதமாக நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பணவீக்கம் பற்றிய நற்செய்தி இருந்தபோதிலும், எதிர்மறையான அபாயங்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய மோதல்களின் அதிகரிப்பு, குறிப்பாக மத்திய கிழக்கில், பொருட்களின் சந்தைகளுக்கு கடுமையான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...