பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது. கிரகத்தின் மிகக் குளிரான பகுதிகளில் கூடச் செழித்து வளரும் பூச்சிகள் ஏன் அங்குத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தனர்.
இந்த நிலையில், பூமியில் நுளம்புகள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக நீண்ட காலமாகப் புகழ்பெற்றிருந்த ஐஸ்லாந்து, தனது அந்தத் தனித்துவத்தை இழந்துவிட்டது.
வேகமாக வெப்பமடைந்து வரும் கிரகத்தின் மற்றொரு காணக்கூடிய விளைவைக் குறிக்கும் வகையில், தீவு நாட்டில் நுளம்புகள் இருப்பதை விஞ்ஞானிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் உள்ளூர் பூச்சி ஆர்வலர் பிஜோர்ன் ஹ்ஜால்டசன் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டார்.
அவர் ரெய்க்ஜாவிக் நகரின் வடமேற்கே உள்ள க்ஜோஸின் பனிப்பாறை பள்ளத்தாக்கில் அந்துப்பூச்சிகளைக் கவனித்தபோது, “சிவப்பு ஒயின் ரிப்பனில் ஒரு விசித்திரமான நுளம்பு” என்று தற்செயலாகக் கண்டார்.
ஹால்டசன், “இது நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று என்பதை உடனடியாக என்னால் உணர முடிந்தது” என்று நகைச்சுவையுடன் கூறி, “கடைசி கோட்டையும் இடிந்து விழுந்தது போல் தெரிகிறது” என்றார்.
ஹால்டசன் சேகரித்த மூன்று மாதிரிகளை (இரண்டு பெண் நுளம்புகள் மற்றும் ஒரு ஆண் நுளம்பு) ஐஸ்லாந்து இயற்கை வரலாற்று நிறுவனத்திற்குச் சரிபார்ப்புக்காக அனுப்பினார்.
பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன், அது ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் குளிர் எதிர்ப்பு நுளம்பு இனமான Culex annulata என்பதை உறுதிப்படுத்தினார்

