சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்

Share

சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்

கிறித்துவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளித்தார்.

மணிப்பூர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இஸ்லாமையும், கிறித்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் இல்லை, அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி விட்டனர் என சீமான் கூறியது சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கண்டனங்களை பெற்ற நிலையில் ‘அநீதிக்கு எதிராக என்றைக்காவது இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் போராடியிருக்கிறார்களா?’ என கேள்வி எழுப்பிய சீமான், நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு வாக்களிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள சீமான், ‘குர் ஆன் அநீதி செய்பவர்களை சாத்தான் என்று கூறுகிறது. ஆட்சியாளர்கள் அநீதி இழைப்பதால் அவர்கள் சாத்தான்கள், ஆகவே அவர்களை ஆதரிப்பவர்களும் சாத்தான்கள்.

குர் ஆன் அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை சாத்தனின் நண்பர்கள் என்கிறது. நான் அவர்களை சாத்தானின் குழந்தைகள் என்று கூறிவிட்டேன்.

அதை வேண்டுமானால் தவறு என்று கூறலாம். நீங்கள் பெரும்பான்மை, சிறுபான்மை என்பதை எதை வைத்து மதிப்பிடுகிறீர்கள்? மதத்தை வைத்து உலகில் மனித கூட்டத்தை கணக்கிட்டதில்லை. ஆக மதத்தை விட, சாதியை விட மொழி தான் அடையாளம்.

இங்குள்ள இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் தமிழர்கள். பெரும்பான்மையான தேசிய இனத்தின் மகன். வந்தவன் போனவன் எல்லாம் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பை கழட்டி அடித்து விடுவேன். மதம் மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறாதது’ என பேசினார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...