சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

 ‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார்

Share

 ‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார்

கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசிய ‘செல்லம்’ என்ற வசனத்தை முதன் முதலில் தாம் பயன்படுத்தியதாகவும், அது பரவி தான் கில்லியில் வந்துள்ளது என்றும் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

தமிழக மாவட்டம் கோவையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான்,”நான் இரவில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ‘சொல்லு செல்லக்குட்டி’ என பேசினேன். என் மாமியார் வெளியில் தரையில் படுத்திருந்தார். அதை அவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

பின், என் மாமியார் என் மனைவியிடம் இதை பற்றி கூறினார். அதற்கு என் மனைவி, அண்ணன் வடிவேலு கூட பேசியிருப்பார் எனக் கூறியுள்ளார். அதற்கு என் மாமியார், அப்படியா இருவரும் பேசுவார்கள் எனக் கேட்டுள்ளார்” என்றார்.

மேலும் பேசிய சீமான், “முதன் முதலில் ‘செல்லம்’ என்ற வார்த்தையை சினிமாவில் நான் தான் பயன்படுத்தினேன். பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை இயக்கும் போது, ‘செல்லம் இங்க வா போ’ என்று தான் பேசுவோம். அது, இப்போது பரவிவிட்டது.

அப்படி தான் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசும்போது வைத்து விட்டார்கள். அது நான் போட்ட பிட்டு தான். ‘செல்லம்ம்’ -ன்னு பிரகாஷ் ராஜ் பேசுவாரே, அது தான்” எனக் கூறினார்.

Share
தொடர்புடையது
Dead Body 1200px 22 12 18
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – நிமோனியா தொற்றால் மரணம் என தகவல்!

யாழ்ப்பாணம், கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின்...

24 66eb36e41bb99 md
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் 13 நாட்களே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு: உடற்கூற்றுப் பரிசோதனையில் காரணம் வெளிச்சம்!

யாழ்ப்பாணம் (Jaffna), அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின், பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை...

25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...