உலகம்செய்திகள்

YouTube பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவர்! இளம்பெண் பரிதாப பலி

Share
Share

YouTube பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவர்! இளம்பெண் பரிதாப பலி

தமிழகத்தில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் பலருக்கு இயற்கை மீதான ஆர்வம் அதிகமாகி வருகிறது. கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். வேறு வழி இல்லாத காரணத்தினால் மட்டுமே செயற்கை மருத்துவத்தை நாடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அழகுக்குறிப்புகள் முதல் உடல்நிலை பிரச்சனை வரை யூடியூப் பார்த்து தான் அதற்கான தீர்வினை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், தற்போது சிலர் மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கை முறையில் எப்படி பிரசவம் ஆக வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளை யூடியூபில் பார்க்கின்றனர்.

தமிழகம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (27) என்பவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்கள், இருவரும் இயற்கை மீதான ஆர்வம் கொண்டவர்கள். மேலும், இவர்கள் இருவருமே வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இந்நிலையில், லோகநாயகி கர்ப்பமானதையடுத்து தனது வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்று கணவரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது என்று யூடியூபில் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், லோகநாயகிக்கு நேற்று காலை வலி வந்துள்ளது. அப்போது, பேசியபடியே யூடியூப் பார்த்து கணவர் மாதேஷ் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், லோகநாயகிக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கமானார். இதனையடுத்து, அவரை போச்சம்பள்ளியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே லோகநாயகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாதேஷிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இயற்கை முறையில் பிரசவம் பார்த்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...