மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்
உலகம்செய்திகள்

மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்

Share

மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவர் செய்த பயங்கர செயல்

பிரித்தானியர் ஒருவர், இரத்தப் புற்றுநோயால் அவதியுற்றுவந்த தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றியதற்காக சிறையிலடைக்கப்பட்டார்.

பிரித்தானியரான டேவிட் (David Hunter, 76), தன் மனைவியான ஜேனிஸ் (Janice Hunter, 74)உடன் சைப்ரஸ் நாட்டில் வாழ்ந்துவந்தார். தம்பதியருக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், ஜேனிஸ் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

கடுமையான வலியால் அவதியுற்றுவந்த ஜேனிஸ் தன் கணவரிடம் கோரிக்கை ஒன்றைவைத்தார். அது, தன் கணவரே தன் மூச்சை நிறுத்திவிடவேண்டும் என்பதே.

காதல் மனைவி படும் கஷ்டத்தை சகிக்க முடியாத டேவிட், மனைவியின் மூக்கையும் வாயையும் மூடி, அவரது மூச்சை நிறுத்திவிட்டார்.

இது நடந்தது, 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்.

டேவிடுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சைப்ரஸ் நாட்டில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், நேற்று டேவிட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 19 மாதங்கள் அவர் ஏற்கனவே சிறையில் செலவிட்டுவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தார்கள் என்பதும், மனைவியின் வேதனையைக் கண்டதாலேயே அவரது மூச்சை நிறுத்த டேவிட் சம்மதித்ததாகவும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மனைவி உயிரிழந்ததும், டேவிடும் அதிக அளவில் மாத்திரைகளை எடுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றிருந்தார். ஆனால், அவசர மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...