tamilni 209 scaled
உலகம்செய்திகள்

ஒரே ஒரு பொதுமன்னிப்பு… ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு

Share

ஒரே ஒரு பொதுமன்னிப்பு… ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு

துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தில் ஹங்கேரிய முதல் பெண் ஜனாதிபதி பதவியை இழந்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு ஜனாதிபதி Katalin Novak பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த, வேறு வழியின்றி தமது பதவியை துறந்துள்ளார் ஜனாதிபதி Katalin Novak.

ஹங்கேரி மக்கள் ஒன்று திரண்டு வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்தே 46 வயதான Katalin Novak பொதுமன்னிப்பு விவகாரத்தில் தாம் தவறிழைத்ததாக குறிப்பிட்டு, பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அத்துடன் தமது செயல் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தியிருக்கும் என நம்புகிறேன் என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறார்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும் தாம் எப்போதும் முன்வரிசையில் இருப்பதை உறுதி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2022 மார்ச் மாதம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக Katalin Novak பொறுப்புக்கு வந்தார்.

இந்த நிலையில் சிறார் காப்பகங்களுக்கான முன்னாள் துணை இயக்குனர் ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதே தற்போது ஜனாதிபதவிக்கு வேட்டு வைத்துள்ளது. குறித்த முன்னாள் துணை இயக்குனர் தமது மேலதிகாரியின் சிறார் துஸ்பிரயோக விவகாரத்தை மூடிமறைக்க உதவியதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த நபருக்கு ஜனாதிபதி Katalin Novak பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில் தான் இந்த விவகாரம் பத்திரிகை ஒன்றில் கசிந்துள்ளது.

இதனையடுத்தே பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக Katalin Novak தமது பதவியை துறந்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...