13 11
உலகம்செய்திகள்

ரஷ்யாவிற்கு எப்படி தப்பினார் சிரிய ஜனாதிபதி : வெளிவந்தன தகவல்

Share

ரஷ்யாவிற்கு எப்படி தப்பினார் சிரிய ஜனாதிபதி : வெளிவந்தன தகவல்

சிரியாவில்(syria) கிளர்ச்சி படைகள் தலைநகரை கைப்பற்றும் முன்பே அந்நாட்டின் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்(bashar al assad) அங்கிருந்து தப்பி ரஷ்யா சென்றடைந்தார்.

எனினும் அவர் சென்ற விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி அவர் பத்திரமாக ரஷ்யாவில்(russia) தரையிறங்கியுள்ளார்.இந்த நெருக்கடியான சூழலில் அவர் எவ்வாறு ரஷ்யா சென்றடைந்தார் என்ற தகவலை ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த நவம்பர் இறுதியில் ஜனாதிபதி ஆசாத்துக்கு எதிராக மிகப் பெரிய போரை எச்டிஎஸ் கிளர்ச்சிக் குழு தொடங்கியது. ஆசாத் படையில் இருந்த பல்வேறு ராணுவ தளபதிகள் கிளர்ச்சிக் குழுவுடன் ரகசியமாக கைகோர்த்தனர். இதன் காரணமாக அலெப்போ உள்ளிட்ட நகரங்களில் கிளர்ச்சிக் குழு வீரர்களுடன் ராணுவ வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.

தீவிர போரை தொடங்கிய 13 நாட்களில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிக் குழுக்கள் சுற்றிவளைத்தன. அங்கும் ஜனாதிபதி ஆசாத் படை வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.

இதனிடையே துருக்கி(turkey), ரஷ்யா(russia), ஈரான் (iran)நாடுகளின் மூத்த அதிகாரிகள், கத்தார் (qatar)தலைநகர் தோஹாவில் கடந்த 7-ம் திகதி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். கிளர்ச்சிக் குழுக்கள் சார்பில் துருக்கி அதிகாரிகளும் ஜனாதிபதி ஆசாத் சார்பில் ரஷ்யா, ஈரான் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ஆசாத் பத்திரமாக வெளியேற கிளர்ச்சிக் குழுக்கள் ஒப்புக் கொண்டன. இதேபோல சிரியாவின் லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளம், சிரியாவின் கிமெய்மிம் பகுதியில் உள்ள ரஷ்ய விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கிளர்ச்சிக் குழுக்கள் உறுதி அளித்தன.

இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் திகதி நள்ளிரவில் சிரிய ஜனாதிபதி ஆசாத் டமாஸ்கஸில் உள்ள தனது மாளிகையில் இருந்து லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு ரகசியமாக சென்றார். அங்கிருந்து கடந்த 8-ம் திகதி சிறப்பு விமானம் மூலம் அவர் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை சென்றடைந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஜனாதிபதி ஆசாத்தின் மனைவி அஸ்மா மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் ரஷ்யாவில் தஞ்சமடைந்து விட்டனர். தற்போது ஜனாதிபதி ஆசாத்தும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆஸ்திரியாவில் உள்ள ரஷ்ய தூதர் உலினோவ் கூறும்போது, “சிரிய ஜனாதிபதி ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அடைக்கலம் அளித்துள்ளது. எங்களது நண்பர்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா கூறும்போது, “விமான விபத்தில் ஜனாதிபதி ஆசாத் உயிரிழந்துவிட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் பொய்களை பரப்பின. இதற்காக மேற்கத்திய ஊடகங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்” என்று தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...