24 66b8990cebc09
உலகம்

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள்

Share

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள்

பங்களாதேஷின்(bangladesh) சிறுபான்மை இந்து சமூகம், மாணவர் இயக்கங்கள் என்ற போர்வையில் தங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்த போராட்டத்தால் தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

காலாவதியான வேலை ஒதுக்கீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியுடன் பங்களாதேஷில் மாணவர் போராட்டங்கள் வெடித்தது.

போராட்டங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக, போராட்டங்கள் அரசாங்கத்திற்கு எதிராக மாறியது, இது பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இழப்பதில் முடிந்தது.

பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறினார், மேலும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான ஒரு காபந்து அரசாங்கம் மாணவர் ஆர்வலர்களின் தலையீட்டுடன் நியமிக்கப்பட்டது.

இருபது முதல் முப்பத்தேழு வயது வரையிலான மாணவர் இயக்கத்தின் இரண்டு தலைவர்கள் இடைக்கால அரசில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் நாடாளுமன்றத்தைக் கூட கைப்பற்றிய போராட்டக்காரர்கள் இப்போது நாட்டின் விவகாரங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் ஒரு மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என்று கோரி மாணவர் ஆர்வலர்கள் நேற்று(10) நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

அங்கு, முன்னாள் பிரதமருக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன், மற்ற 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் உடனடியாக தனது பதவியிலிருந்து விலகினார்.

இதேவேளை, பங்களாதேஷ் மத்திய வங்கியின் தலைவரும் நேற்று (10) பதவி விலகக் கோரி வங்கி அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.எனினும் அவரது பதவி விலகல் நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய பின்னணியில், மாணவர் போராட்டம் என்ற போர்வையில் பங்களாதேஷின் சிறுபான்மை இந்து சமூகத்தை குறிவைத்து தாக்குதல் சம்பவங்களும் நாட்டில் பதிவாகி வருகின்றன.

ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்ந்த சில நாட்களில், நாட்டின் 52 மாவட்டங்களில் இந்து சமூகத்தை குறிவைத்து 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் கோரி, தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் சிறுபான்மை இந்து சமூகத்தினர் மாபெரும் போராட்டங்களை நடத்தினர்.

சிறுபான்மையினரைத் துன்புறுத்துபவர்களின் விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறுபான்மையினருக்கு நாடாளுமன்றத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களால் டாக்காவில் சாலைகள் கூட மூடப்பட்டன.

இந்த போராட்டங்களில் 700,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், இதற்கு சில மாணவர் ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் 170 மில்லியன் மக்கள்தொகையில் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர், அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை இவர்கள் ஆதரிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

e93a3c90 fc70 11f0 9f00 a7fda7ef067e
உலகம்செய்திகள்

நோர்வே அரச குடும்பத்தில் நிலநடுக்கம்: பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து இளவரசியின் மகன் கண்ணீர் வாக்குமூலம்!

நோர்வே இளவரசி மெட்டே-மேரிட்டின் (Crown Princess Mette-Marit) மகன் மாரியஸ் போர்க் ஹோய்பி, தம்மீது சுமத்தப்பட்டுள்ள...

336t33r preview
செய்திகள்உலகம்

ஒட்டகங்களுக்கு அதிகாரபூர்வ கடவுச்சீட்டு: சவூதி அரேபியாவின் அதிரடி நடவடிக்கை!

சவூதி அரேபியாவின் அடையாளம் மற்றும் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ள ஒட்டகங்களுக்கு இனி அதிகாரபூர்வ கடவுச்சீட்டுகள் (Passport) வழங்கப்படவுள்ளன....

26 69820b5b1bedb
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி: மார்ச் 1 முதல் அரசு வணிகக் கடன்கள் ரத்து!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களாக (Green Card Holders) இருப்பவர்கள், இனிவரும் காலங்களில் அரசு உதவிபெறும்...