1 2 scaled
உலகம்செய்திகள்

தமிழ்நாட்டில் இந்தி!! நிர்மலா சீதாராமனுக்கு சின்மயி கூறிய பதில்

Share

தமிழ்நாட்டில் இந்தி மொழியை படிக்க விடாமல் தடுத்தார்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாடகி சின்மயி பதில் அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இந்தியை திணிப்பை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கற்று கொள்ள கூடாது என்று இருந்தது” எனக் கூறினார்.

மேலும் அவர், “என்னுடைய வாழ்நாள் அனுபவத்தில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் இந்தி மொழியை படிக்க விடாமல் தடுத்தார்கள்” என்று திமுகவை சாடி பேசினார்.

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பாடகி சின்மயி தனது ட்வீட் மூலமாக பதில் கொடுத்துள்ளார். அதில் அவர்,” தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அவர்கள் விரும்பும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் உள்ள தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபாவில் அதிக எண்ணிக்கையிலான ஹிந்தி கற்பவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான இந்தி டாப்பர்கள் வருகிறார்கள்.

நான் சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் ஹிந்தியை இரண்டாவது மொழிகளாக கற்றேன். சென்னையில் படிக்கும் போது ஜெர்மன் மற்றும் பிரஞ்சு கூட கற்றேன். எனது உறவினர் தமிழ் மற்றும் ஹிந்தியுடன் துலு மற்றும் படகாவையும் பேசினார்.

மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரி 1906 முதல் இயங்கி வருகிறது. சமஸ்கிருதம் என்பது பலருக்கு மிகவும் கடினமான மொழியாகும். தாய்மொழிச் செல்வாக்கின் காரணமாக , இந்தியை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கற்றவர்களுக்கு அதைப் பேசுவதற்குத் தடையாக இருந்ததே அவர்கள் கேலி செய்யப்பட்டதற்கு காரணம்.

வரலாற்று ரீதியாக கிளர்ச்சிக்கு ஒரு உண்மையான காரணம் இருந்தது. ஏன் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்வது நல்லது” என்று பதில் அளித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...