tamilni 138 scaled
உலகம்செய்திகள்

உக்ரைன் போரில் பெரும் இழப்பு: ராணுவ ஆயுதங்களை திரும்ப பெற ரஷ்யா முயற்சி

Share

உக்ரைன் போரில் அதிகமான ஆயுதங்களை இழந்த பிறகு ரஷ்யா தங்களுடைய ராணுவ தளவாடங்களை திரும்ப வாங்க முயற்சித்து வருகிறது.

உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் இந்த போர் நடவடிக்கையில் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிட்டத்தட்ட பல மில்லியன் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

ராணுவ வீரர்களின் அதிகப்படியான இழப்பு மற்றும் ராணுவ தளவாடங்களின் இழப்பு ஆகியவை ரஷ்யாவை இந்த போர் நடவடிக்கையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனுடனான போரில் அதிகப்படியான ஆயுத இழப்பு காரணமாக பிற நாடுகளுக்கு விற்பனை செய்த ராணுவ தளவாடங்களை ரஷ்யா திரும்ப பெற முயற்சித்து வருகிறது.

இது குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா பல ஆண்டுகளாக ஆயுத வர்த்தகத்தை செய்து வரும் நிலையில், பாகிஸ்தான், எகிப்து, பெலாரஸ் மற்றும் பிரேசில் ஆகிய பிற நாடுகளிடம் விற்பனை செய்த ஆயுதங்களை திரும்ப வாங்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.

அவற்றில் குறிப்பாக ரஷ்ய கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர்களில் உள்ள இயந்திரங்களை வாங்க ரஷ்யா விரும்புகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக முன்கள போர் வரிசையில் ரஷ்யா அதிகப்படியான இழப்புகளை சந்தித்ததே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...