tamilni 138 scaled
உலகம்செய்திகள்

உக்ரைன் போரில் பெரும் இழப்பு: ராணுவ ஆயுதங்களை திரும்ப பெற ரஷ்யா முயற்சி

Share

உக்ரைன் போரில் அதிகமான ஆயுதங்களை இழந்த பிறகு ரஷ்யா தங்களுடைய ராணுவ தளவாடங்களை திரும்ப வாங்க முயற்சித்து வருகிறது.

உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் இந்த போர் நடவடிக்கையில் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிட்டத்தட்ட பல மில்லியன் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

ராணுவ வீரர்களின் அதிகப்படியான இழப்பு மற்றும் ராணுவ தளவாடங்களின் இழப்பு ஆகியவை ரஷ்யாவை இந்த போர் நடவடிக்கையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனுடனான போரில் அதிகப்படியான ஆயுத இழப்பு காரணமாக பிற நாடுகளுக்கு விற்பனை செய்த ராணுவ தளவாடங்களை ரஷ்யா திரும்ப பெற முயற்சித்து வருகிறது.

இது குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா பல ஆண்டுகளாக ஆயுத வர்த்தகத்தை செய்து வரும் நிலையில், பாகிஸ்தான், எகிப்து, பெலாரஸ் மற்றும் பிரேசில் ஆகிய பிற நாடுகளிடம் விற்பனை செய்த ஆயுதங்களை திரும்ப வாங்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.

அவற்றில் குறிப்பாக ரஷ்ய கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர்களில் உள்ள இயந்திரங்களை வாங்க ரஷ்யா விரும்புகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக முன்கள போர் வரிசையில் ரஷ்யா அதிகப்படியான இழப்புகளை சந்தித்ததே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...