ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை
உலகம்செய்திகள்

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை

Share

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி: ஹரி மேகனிற்கு அழைப்பில்லை

ராஜ குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூ கூட தன் முன்னாள் மனைவியுடன் அந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்கிறார். ஆனால், இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவிக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு இல்லை!

அடுத்த மாதம் 8ஆம் திகதியுடன், மன்னர் சார்லசின் தாயாகிய எலிசபெத் மகாராணியார் மரணமடைந்து ஒரு ஆண்டு முடிவடைகிறது.

மகாராணியார் மறைந்ததன் ஓராண்டு நிறைவை நினைவுகூறும் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பால்மோரல் மாளிகையில் நடைபெற உள்ளது. அதில், மன்னர் சார்லஸ், ராணி கமீலா உட்பட ராஜ குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும்கூட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், மறைந்த மகாராணியாரின் செல்லப் பேரனான இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.

இத்தனைக்கும், ஹரி, செப்டம்பர் 9ஆம் திகதி ஜேர்மனியில் துவங்க இருக்கும் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைப்பதற்காக Düsseldorf நகருக்கு வருகிறார்.

ஆகவே, அவர் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் எளிதாக கலந்துகொள்ள முடியும். ஆக, ஹரி மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது ஐரோப்பாவிலேயே இருந்தும் கூட அவருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...