20 22
உலகம்செய்திகள்

போர் நிறுத்தம் அமுல்: விடுதலை செய்யும் பணய கைதிகளின் பெயரை வெளியிட்ட ஹமாஸ்

Share

போர் நிறுத்தம் அமுல்: விடுதலை செய்யும் பணய கைதிகளின் பெயரை வெளியிட்ட ஹமாஸ்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், விடுதலை செய்யப்பட உள்ள பணயக் கைதிகள் மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் கத்தார், எகிப்து, அமெரிக்கா நாடுகளின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

இந்த போர் நிறுத்தம் 3 கட்டங்களை கொண்டது. ஹமாஸ் தரப்பில் இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது.

அதன்படி முதற்கட்டமாக 6 வாரங்களில் 33 பணய கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அதற்கு ஈடாக 1,904 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். இஸ்ரேல் 90 பேரை விடுதலை செய்ய வேண்டும்.

அதற்கு முன்பாக, விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர்களை ஒப்பந்தப்படி தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் 90 பணய கைதிகளின் பெயர்களை நேற்றே வெளியிட்டு விட்டது.

இந்த நிலையில், இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு ஹமாஸ் மூன்று பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28) மற்றும் டோரன் ஸ்டான்பிரசர் (31) ஆகிய மூவரை ஹமாஸ் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...