2
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பின் அதிரடி நடவடிக்கை : பணயக்கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்

Share

இஸ்ரேல் (Israel) – காசா (Gaza) போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் (Hamas) வசம் பணயக்கைதிகளாகவுள்ள 11 பேரின் பெயர்ப் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த பணயக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதோடு இவர்களில் 08 பேர் இன்று (30.01.2025) விடுவிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாவது, இந்த வாரத்தின் இரண்டு நாட்களில் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் உட்பட 11 பேர் விடுவிக்கப்படுவார்கள்.

ஹமாஸ் இதுவரை ஏழு பணயக்கைதிகளை விடுவித்துள்ளது, அதற்கு ஈடாக இஸ்ரேலில் இருந்து 290 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட வேண்டிய பணயக்கைதிகளின் பட்டியல் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் ஐந்து தாய்லாந்து நாட்டினர் உட்பட மொத்தம் 8 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஜனவரி 19ஆம் திகதி நடைமுறைக்கு வந்ததால், போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிக்குள் ஏராளமான உதவிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...