rtjy 315 scaled
உலகம்செய்திகள்

ஏராளமான யூதர்களை கொன்ற ஹமாஸ் போராளி

Share

ஏராளமான யூதர்களை கொன்ற ஹமாஸ் போராளி

ஹமாஸ் போராளி ஒருவர் தாம் யூதர்கள் ஏராளமானோரை கொன்றுவிட்டதாக தனது தந்தையுடன் பேசிய தொலைபேசி ஒலிப்பதிவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்குள் கடந்த (07.10.2023) திகதி ஊடுருவிய ஹமாஸ் போராளி, வயதான தம்பதியரை கொன்றுவிட்டு, பின் அவர்களது தொலைபேசியிலிருந்து காசாவில் வசிக்கும் தமது பெற்றோருடன் பேசியதாக கூறப்படுகிறது.

அந்த ஒலிப்பதிவில், உங்கள் மகன் ஏராளமான யூதர்களை கொன்று விட்டதால் தலை நிமிர்ந்து நடக்குமாறு தாய் தந்தையரிடம் கூறும் அந்த போராளி, கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பத்திரமாக திரும்பி வருமாறு மகனிடம் அந்த தாயார் கூறுவதும் உரையாடலில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வணக்கம் அப்பா, நான் மெபல்சிமில் இருந்து உங்களிடம் பேசுகிறேன். இப்போது எனது வாட்ஸ்அப்பைத் திறக்கவும்,என் கைகளால் எத்தனை பேரைக் கொன்றேன் என்று பாருங்கள்.

“அப்பா, நான் ஒரு யூதப் பெண்ணின் தொலைபேசியிலிருந்து உங்களிடம் பேசுகிறேன். அவளையும் அவள் கணவனையும் கொன்றேன்.

நான் என் சொந்த கைகளால் 10 பேரைக் கொன்றேன். அப்பா வாட்ஸ்அப்பை திறந்து நான் எத்தனை பேரைக் கொன்றேன் என்று பாருங்கள் என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...