உலகம்செய்திகள்

ஏராளமான யூதர்களை கொன்ற ஹமாஸ் போராளி

rtjy 315 scaled
Share

ஏராளமான யூதர்களை கொன்ற ஹமாஸ் போராளி

ஹமாஸ் போராளி ஒருவர் தாம் யூதர்கள் ஏராளமானோரை கொன்றுவிட்டதாக தனது தந்தையுடன் பேசிய தொலைபேசி ஒலிப்பதிவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்குள் கடந்த (07.10.2023) திகதி ஊடுருவிய ஹமாஸ் போராளி, வயதான தம்பதியரை கொன்றுவிட்டு, பின் அவர்களது தொலைபேசியிலிருந்து காசாவில் வசிக்கும் தமது பெற்றோருடன் பேசியதாக கூறப்படுகிறது.

அந்த ஒலிப்பதிவில், உங்கள் மகன் ஏராளமான யூதர்களை கொன்று விட்டதால் தலை நிமிர்ந்து நடக்குமாறு தாய் தந்தையரிடம் கூறும் அந்த போராளி, கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பத்திரமாக திரும்பி வருமாறு மகனிடம் அந்த தாயார் கூறுவதும் உரையாடலில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வணக்கம் அப்பா, நான் மெபல்சிமில் இருந்து உங்களிடம் பேசுகிறேன். இப்போது எனது வாட்ஸ்அப்பைத் திறக்கவும்,என் கைகளால் எத்தனை பேரைக் கொன்றேன் என்று பாருங்கள்.

“அப்பா, நான் ஒரு யூதப் பெண்ணின் தொலைபேசியிலிருந்து உங்களிடம் பேசுகிறேன். அவளையும் அவள் கணவனையும் கொன்றேன்.

நான் என் சொந்த கைகளால் 10 பேரைக் கொன்றேன். அப்பா வாட்ஸ்அப்பை திறந்து நான் எத்தனை பேரைக் கொன்றேன் என்று பாருங்கள் என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...