tamilnaadi 136 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் தலைவர்களுடன் ஆலோசனை முன்னெடுத்த ஹவுதிகள்

Share

ஹமாஸ் தலைவர்களுடன் ஆலோசனை முன்னெடுத்த ஹவுதிகள்

இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொருட்டு, முதல் முறையாக ஹமாஸ் தலைவர்களும் ஏமனின் ஹவுதிகளும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஹமாஸ் மற்றும் ஹவுதிகளுடன் ஈராக்கை சேர்ந்த சில குழுக்கள், லெபனானின் ஹிஸ்புல்லா ஆகியோர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து பல மாதங்களாக செங்கடல் பாதையை பயன்படுத்தும் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாங்கள் குறி வைத்து வருவதாகவும், காஸா மக்களுக்காக இதை தாங்கள் முன்னெடுப்பதாகவும் ஹவுதிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹமாஸ் தலைவர்கள் மற்றும் ஹவுதிகளுடனான அரிதான சந்திப்பானது கடந்த வாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சந்திப்பானது எங்கே முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

தெற்கு காசாவின் ரஃபாவில் இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலைப் பற்றி ஹவுதிகளும் ஹமாஸ் தலைவர்களும் விவாதித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. காசாவில் ஹமாஸின் கடைசி கோட்டையான ரஃபாவிலும் அதைச் சுற்றியும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.

பெரும்பாலானோர் இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பான இடமென கருதி ரஃபா பகுதியில் திரண்டவர்கள் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, சர்வதேச அழுத்தத்தை மீறி ரஃபாவில் இராணுவ நடவடிக்கைக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 67c59f0b797d7
இந்தியாசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்தி தப்பிக்க உதவிய 4 சந்தேகநபர்களுக்கு நவம்பர் 7 வரை விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட...

25 68fb42eb327aa
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீட்டிப்புக்கு எதிர்ப்பு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால்...

379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...

Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த்...