pic
உலகம்செய்திகள்

எச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு – இந்திய ஊழியர்களுக்கு ஆறுதல்!

Share

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம் 19-ஆம் தேதி அதிபர் டிரம்ப், 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரைப் பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதால், அதிகளவில் எச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் பொருந்தும் என்றும், ஏற்கனவே எச்-1பி வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை (USCIS) ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எஃப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள், தங்களது விசாவை எச்-1பி விசா நிலைக்கு மாற்ற விண்ணப்பிக்கும்போது, உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.

தற்போது எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நிலையைப் புதுப்பிக்க அல்லது நீட்டிக்க பழைய கட்டணத்திலேயே விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கும் எந்தத் தடையும் இல்லை. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வரும் சர்வதேச மாணவர்கள் உட்பட பல்வேறு வகை விசா வைத்திருப்பவர்களுக்குப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
1759803512
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான யாழ்ப்பாண யுவதி தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனளிக்காமல் மரணம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற...

image cb0f8da672
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ தென் கொரியாவில் துணை சபாநாயகரைச் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்!

தென் கொரியாவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு...

images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...