pic
உலகம்செய்திகள்

எச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு – இந்திய ஊழியர்களுக்கு ஆறுதல்!

Share

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம் 19-ஆம் தேதி அதிபர் டிரம்ப், 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரைப் பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதால், அதிகளவில் எச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் பொருந்தும் என்றும், ஏற்கனவே எச்-1பி வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை (USCIS) ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எஃப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள், தங்களது விசாவை எச்-1பி விசா நிலைக்கு மாற்ற விண்ணப்பிக்கும்போது, உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.

தற்போது எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நிலையைப் புதுப்பிக்க அல்லது நீட்டிக்க பழைய கட்டணத்திலேயே விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கும் எந்தத் தடையும் இல்லை. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வரும் சர்வதேச மாணவர்கள் உட்பட பல்வேறு வகை விசா வைத்திருப்பவர்களுக்குப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...

vegetable
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக காய்கறி விலைகள் அதிகரிக்கும் அபாயம்: மனிங் சந்தை வர்த்தகர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகக் காய்கறி விலைகள் அதிகரிக்கும் என்று மனிங் சந்தை...

images 2 1
செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி முன்மொழிவு ஆளுநரிடம் கையளிப்பு: ஆசிரியர் ஆளணி சீராக்கம் குறித்து கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் மற்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையே இன்று...

25 68f722fb6bd68
செய்திகள்இலங்கை

முதலமைச்சர் வேட்பாளர் ஆசை! பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகத் தயார் என தகவல்!

அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு,...