வெளிநாடொன்றில் பாடசாலை மீது துப்பாக்கிச்சூடு! 9 பேர் பலி

25 684811b519548

அவுஸ்திரேலியாவின் கிராஸ் நகரில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது இன்று(10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலை வளாகத்தை சுற்றி பொாலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு, பொரளையிலுள்ள மெத்சர செவன அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பொரளை சரணபாலஹிமி மாவத்தையை சேர்ந்த 24 வயதான ஆர்.எம். உயனஹேவகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version