பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை

Share

பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை

பிரித்தானியாவில் பொலிஸ் அலுவலர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி,

‘‘இலங்கையைச் சேர்ந்த லூயிஸ் டி சொய்ஸா என்பவர், பிரித்தானியா பொலிஸ் அலுவலரான சார்ஜன்ட் மாட் ரதனா என்பவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

54 வயதான குறித்த பொலிஸ் அலுவலர், சொய்ஸாவை கைது செய்ய தயாரானபோதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

2020 செப்டம்பர் 25ஆம் திகதியன்று சொய்ஸாவை வீதியில் வைத்து தடுத்த, பொலிஸ் அதிகாரிகள் வெடிமருந்துகளையும் கஞ்சாவையும் அவரிடம் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

எனினும் அவரின் கைக்குக் கீழே மறைத்து வைத்திருந்த ஆறு தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கியை பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சொய்ஸாவின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்த போதும், தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த அவரது துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியை நோக்கி சுட்டார் என்று விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று(28.07.2023) பிரித்தானியாவின் நோர்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில், சொய்ஸாவுக்கான தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...