tamilni 337 scaled
உலகம்செய்திகள்

ரஸ்ய – உக்ரைன் போர்; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம்

Share

ரஸ்ய – உக்ரைன் போர்; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம்

ரஸ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஆசியாவில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் உக்ரேனிலிருந்து தானிய வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்த கருங்கடல் தானிய இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகளில் இருந்து ரஷ்யா விலகிக் கொண்டது.

இந்த நடவடிக்கையானது ஆசிய நாடுகளை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரேனின் ஏற்றுமதியில் ஏற்படும் வீழ்ச்சியானது வேறு நாடுகளில் இருந்து தானிய வகைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனின் கருங்கடல் தானிய இணக்கப்பாட்டு திட்டத்தின் கீழ் 46 வீதமான தானிய வகைகள் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பதுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 40 வீதமான தானியங்களும், 12 வீதமான தானிய வகைகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்கிரனின் தானிய வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா காணப்படுகின்றது.

நான்கில் ஒரு பகுதி அதாவது இருபத்தைந்து விதமான பொருட்களை சீனா இறக்குமதி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவுப் பொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையானது ஆசிய நாடுகளின் உணவு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தானிய வகைகள் மற்றும் மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் போர் காரணமாக இவ்வாறு உணவு பொருட்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு ஆசிய நாடுகளை அதிக அளவில் பாதிக்கும் என சர்வதேச ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...