ரஷ்யாவின் மிரட்டலை மீறி உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறிய முதல் சரக்கு கப்பல்! வெளியான தகவல்
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் மிரட்டலை மீறி உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறிய முதல் சரக்கு கப்பல்! வெளியான தகவல்

Share

ரஷ்யாவின் மிரட்டலை மீறி உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறிய முதல் சரக்கு கப்பல்! வெளியான தகவல்

உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், அந்த நாட்டின் மிரட்டலையும் மீறி உக்ரைன் துறைமுகத்தில் இருந்து முதல் சரக்கு கப்பல் வெளியேறியுள்ளது.

உக்ரைனின் தெற்கு துறைமுகமான ஒடெசாவில் இருந்து தொடர்புடைய சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். கருங்கடல் வழியை பயன்படுத்தும் எந்த கப்பலும் தங்கள் கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகும் என்றே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதுவே அப்பகுதியில் புதிய சிக்கலை ஏற்படுத்தும் சூழலையும் உருவாக்கியது. இந்த நிலையில் ஹொங்ஹொங் நாட்டைச் சேர்ந்த Joseph Schulte என்ற சரக்கு கப்பல் புதன்கிழமை பகல் புறப்பட்டு சென்றதாக உக்ரைன் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 16ம் திகதிக்கு பின்னர் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறும் முதல் சரக்கு கப்பல் இதுவென கூறுகின்றனர். மட்டுமின்றி, குறித்த கப்பலானது 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெளியேற முடியாமல் ஒடெசா துறைமுகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.

மட்டுமின்றி, ரஷ்யாவால் அந்த கப்பலுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடை வழங்க உக்ரைன் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்த நிலையிலேயே, அந்த கப்பல் புறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த கப்பலானது துருக்கியை சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பின்னர், தானிய கிடங்குகள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகள் மீது தொடர் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.

இதனிடையே, ருமேனிய எல்லைக்கு அருகிலுள்ள நதி துறைமுகத்தில் உள்ள தானிய கிடங்குகளை ரஷ்ய ட்ரோன்கள் சேதப்படுத்தியதாக ஒடெசா பிராந்தியத்தின் ஆளுநர் புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த விவகாரம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ருமேனியாவை கொந்தளிக்க வைத்துள்ளது. தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர், உக்ரைன் தானிய ஏற்றுமதியானது ருமேனியா ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது Joseph Schulte என்ற சரக்கு கப்பல் சுமார் 30,000 டன் சரக்குடன் புறப்பட்டு சென்றுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உக்ரைன் துறைமுகங்களில் சிக்கிக்கொண்ட 60 சரக்கு கப்பல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...