உலகம்செய்திகள்

கனடா செல்ல காத்திருப்போருக்கான அதிஷ்ரம்!

download 18 1 4
Share

கனடா செல்ல காத்திருப்போருக்கான அதிஷ்ரம்!

கனடாவில் வாழும் ஆசையிலிருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது கனேடிய புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.

அதாவது, கனடாவில் குடியுரிமை அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை தங்களுடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்கவைக்க அனுமதி அளிக்கும் வகையில் சூப்பர் விசா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவரின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

அப்படி சூப்பர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களை கனடாவுக்கு வரவேற்கு தங்கள் மகன், மகள் அல்லது பேரப்பிள்ளைகள், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கான செலவுகளை கவனித்துக்கொள்வோம் என்று உறுதியளிக்கும் ஒரு கடிதத்துடன், குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் மற்றும் தங்களை கனடாவுக்கு வரபேற்பவரின் கனேடிய குடியுரிமை அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதியின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.

கனடாவில் பெறப்பட்ட, செல்லத்தக்க மருத்துவக் காப்பீடு வைத்துள்ளதற்காக ஆதாரத்தையும் சமர்ப்பிப்பது அவசியம். வருவாய் ஆதாரம் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு வரவேற்கும் கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற நபர், தங்கள் வருவாய், தங்கள் குடும்பத்தினரின் தேவைகளை சந்திக்கப்போதுமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

பிற நிபந்தனைகள் கனடாவுக்கு வர விண்ணப்பித்துள்ள, கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவரின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி, தங்கள் சொந்த நாட்டுடன் எத்தகைய உறவு வைத்துள்ளார்கள், எதற்காக கனடா வருகிறார்கள், அவர்களுடைய குடும்பம், வருவாய், சொந்த நாட்டில் அவர்களுடைய நிதி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை குறித்தும் கனடா அதிகாரிகள் சோதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...