tamilni 217 scaled
உலகம்செய்திகள்

தங்கம், வெள்ளி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்: சொந்தகாரர் யார் தெரியுமா?

Share

தங்கம், வெள்ளி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்: சொந்தகாரர் யார் தெரியுமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை இந்தியாவின் பாட்டியாலா மகாராஜா 1982ம் ஆண்டே சொந்தமாக வைத்திருந்தார் என்பதை நம்ப முடிகிறதா?

உலகின் ஆடம்பர கார் விற்பனையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் காரை சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சிலரால் மட்டுமே வாங்க முடியும், ஏனென்றால் அதன் விலை அவ்வளவு அதிகம்.

தன்னுடைய நிறுவனத்தின் அந்தஸ்து மற்றும் தரத்தை குறைத்து கொள்ள கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தரத்தில் சமரசம் செய்யக்கூடிய விலை குறைந்த காரில் தயாரிக்க கூடாது என்ற விதியை கடந்த 100 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது.

அப்படி இருக்கையில், 1892ம் ஆண்டிலேயே பாட்டியாலா பகுதி மகாராஜா இந்தியாவின் முதல் மோட்டார் காரை ஆர்டர் செய்து அந்த காரின் நம்பராக 0 என எழுதினார்.

டி டியான்-பூட்டன் என்ற பிரெஞ்சு மோட்டார் காரான இது, வரலாற்றில் 0 என்ற பதிவு எண் நம்பர் பிளேட்டை கொண்ட முதல் கார் இது என்ற பெருமையும் பெற்றது.

பாட்டியாலா மகாராஜாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரை தொடர்ந்து, இந்திய மன்னர்கள் பலருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மீது விருப்பம் அதிகரித்தது.

பாட்டியாலா மகாராஜா ஆர்டர் செய்த இந்த கார் முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வெள்ளியால் தயாரிக்கப்பட்டு இருந்தது(Gold Rolls Royce Car). இதன் ஸ்டீயரிங் விலை உயர்ந்த யானை தந்தத்தால் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

மகாராஜா இந்த காரை தன்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், பிற மன்னர்கள் மற்றும் பேரரசர்களின் திருமணங்களுக்கும் கடனாக அனுப்பி வைத்தார். தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த காருடன் சேர்த்து, வேட்டைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரையும் மகாராஜா வாங்கினார்.

இந்த காரில் தான் மவுண்ட்பேட்டன் பிரபுவை மகாராஜா வேட்டைக்காக அழைத்து செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை சிறப்புகளை தாங்கிய இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார், சுமார் 70 மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...