Gold Sudan
உலகம்செய்திகள்

இடிந்து விழுந்தது தங்கச் சுரங்கம்- 38 பேர் பலி

Share

தெற்கு சூடானின் மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் உள்ள எல் நுஹுத் நகருக்கு அருகில் உள்ள தங்கச் சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

இதேவேளை இடிந்து விழுந்த தங்கச் சுரங்கமானது செயல்படாத நிலையில் இருந்த நிலையில், சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்துள்ளது.

இறந்தவர்களைத் தவிர குறைந்தது 08 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் 36.6 தொன் தங்கங்களை உற்பத்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...

02 22
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவுக்கு முன் நிகழ்ந்த அரை பில்லியன் டொலர் மர்ம வர்த்தகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாகத் தனது ‘TruthSocial’ தளத்தில்...

01 21
செய்திகள்உலகம்

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு: மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு எச்சரிக்கை!

அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள வலேரோ (Valero) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று (மார்ச்...

21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...