Gold Sudan
உலகம்செய்திகள்

இடிந்து விழுந்தது தங்கச் சுரங்கம்- 38 பேர் பலி

Share

தெற்கு சூடானின் மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் உள்ள எல் நுஹுத் நகருக்கு அருகில் உள்ள தங்கச் சுரங்கமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

இதேவேளை இடிந்து விழுந்த தங்கச் சுரங்கமானது செயல்படாத நிலையில் இருந்த நிலையில், சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்துள்ளது.

இறந்தவர்களைத் தவிர குறைந்தது 08 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் 36.6 தொன் தங்கங்களை உற்பத்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...