உலகம்செய்திகள்

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 14 வயது மாணவியை கொன்ற காதலன்!

Share

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 14 வயது மாணவியை கொன்ற காதலன்!

தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் 10ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ரேணுகா (14). இவர் கடந்த 23ஆம் திகதி பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால் மாணவியின் தந்தை மாரி பொலிஸில் புகார் அளித்தார். உடனே பொலிஸார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், ரேணுகா கடைசியாக யோகேஸ்வரனிடம் (21) பேசியதாக தெரிய வந்தது.

இதனையடுத்து யோகேஸ்வரனைப் பிடித்து விசாரித்தபோது ரேணுகாவை அவர் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சி அளித்தார்.

அவரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தனிமையில் சந்தித்து பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது யோகேஸ்வரன் ஆத்திரத்தில் ரேணுகாவை துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அவரின் உடலை முட்புதரில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

அதன் பின்னர் ரேணுகாவின் உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யோகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...