செய்திகள்உலகம்

தற்கொலை குண்டுதாரிகளுக்கு பரிசில்கள்- நிறைவேறுமா தலிபான்களின் நோக்கம்?

taliban
Share

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தினருக்கு தலிபான்களால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிற நடவடிக்கை சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது.

ஆப்கானின் படைகள் மற்றும்  அமெரிக்கப் படைகளுக்கு எதிராக  மேற்கொண்ட தற்கொலைக்குண்டுதாரிகளின் குடும்பத்தினதினரை ஊக்குவிக்கும் முகமாக தலிபான்ககளால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தாலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில், அமெரிக்கப் படையினர் வெளியேறியிருந்தனர்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் வசமானது.

இந்நிலையில் அமெரிக்காப் படையினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த காலப்பகுதிகளில், அவர்கள் மீதும், ஆப்கானிஸ்தான் படையினர் மீதும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடாத்திய தலிபான்களுக்கு வெகுமதியளிக்கும் பொருட்டு, உயிரிழந்த தலிபான்களின் குடும்பங்களுக்கு, தலிபான் ஆட்சியாளர்களால் வெகுமதியளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 ஆயிரம் ஆப்கான் நாணயங்களை வழங்கவும், அக்குடும்பங்களுக்கு சொந்த நிலத்தை வழங்கவும் தலிபான் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் மனித உரிமை அமைப்புக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...