tamilni 311 scaled
உலகம்செய்திகள்

காசா பகுதியில் குவிந்துள்ள 35,000 ஹமாஸ் வீரர்கள்: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் அழுத்தம்

Share

காசா பகுதியில் குவிந்துள்ள 35,000 ஹமாஸ் வீரர்கள்: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் அழுத்தம்

சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த தாக்குதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 7,292 ஆக உயர்ந்துள்ளது.

இதில் இஸ்ரேலில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,405 பேரும், காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5,791 பேரும் உயிரிழந்தனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளை எதிர்த்து ஹமாஸ் வீரர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வரும் நிலையில், ஹமாஸ் படை வீரர்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய படைகளை எதிர்த்து சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஹமாஸ் அரசியல் துறை உறுப்பினர் காஜி ஹமாத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...