rtjy 252 scaled
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு ஜேர்மனி மனிதாபிமான நிதியுதவி

Share

காசா மக்களுக்கு ஜேர்மனி மனிதாபிமான நிதியுதவி

காசா மக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான எனலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் மனிதாபிமான நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள நிலையில் ஜேர்மனியும் இதில் இணைந்துள்ளதைாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ஜேர்மனி மருத்துவக் குழுக்களையும் காசா பகுதிக்கு அனுப்பத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான எனலெனா பேர்பாக் தற்போது ஜோர்டான் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஜோர்டானில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்றபோது, “எங்கள் செய்தி தெளிவானது, நாங்கள் அப்பாவி பாலஸ்தீனிய தாய்மார்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகளை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளமை” குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....