rtjy 8 scaled
உலகம்செய்திகள்

நாடொன்றிற்கு 4,000 வீரர்களை அனுப்பும் ஜேர்மனி

Share

நேட்டோ அமைப்புக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக, நேட்டோ பிராந்தியத்தின் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ள நாடு ஒன்றிற்கு 4,000 இராணுவ வீரர்களை அனுப்ப ஜேர்மனி விருப்பம் தெரிவித்துள்ளது.

லிதுவேனியா நாட்டுக்குச் சென்றுள்ள ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Boris Pistorius லிதுவேனியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது திடீரென போர் தொடுத்தபோது, அந்த விடயம், ரஷ்யாவின் அருகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்கமுடியாது.

அவ்வகையில், ரஷ்யாவுக்கு அருகில் அமைந்துள்ள நேட்டோ உறுப்பு நாடான லிதுவேனியாவையும் ரஷ்யா தாக்கலாம் என்பதால், அப்படி ஏதாவது தாக்குதல் நிகழ்ந்தால் லிதுவேனியாவை பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்களை தயாராக நிறுத்த இருப்பதாக ஜேர்மனி அந்நாட்டுக்கு உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், தற்போது லிதுவேனியா நாட்டுக்குச் சென்றுள்ள ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Boris Pistorius, நேட்டோ அமைப்பின் கிழக்கு ஓரத்தை வலுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் அமைந்துள்ள நாடான லிதுவேனியாவுக்கு 4,000 ஜேர்மன் இராணுவ வீரர்களை அனுப்ப ஜேர்மனி விரும்புவதாக தெரிவித்தார்.

அவர்களை அங்கேயே நிரந்தரமாக தங்கவைக்கவும் ஜேர்மனி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே லிதுவேனியாவில் நேட்டோ படையினர் 1,660 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 780 பேர் ஜேர்மன் இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...