16 11
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பரபரப்பு: உக்ரைன் ஜனாதிபதி வருகையின் போது நடந்த அசம்பாவிதம் – பலர் படுகாயம்

Share

ஜேர்மனியில் பரபரப்பு: உக்ரைன் ஜனாதிபதி வருகையின் போது நடந்த அசம்பாவிதம் – பலர் படுகாயம்

ஜேர்மனி (Germany) – முனிச்சில் நகரத்தில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவராத நிலையில், 15 மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, காவல்துறையினர் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறுயுள்ளதுடன், அவர்களில் பலர் கவலைக்கிடமாகவும், மோசமான நிலையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைள் இடம்பெற்று வருவதாகவும், காரின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது பயங்கரவாத தாக்குதலா விபத்தா என்பது குறித்து தெரியவராத நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், போக்குவரத்து தொழிற்சங்கமான வெர்டியுடன் இணைக்கப்பட்ட பேரணிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த நகரத்தில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு ஆரம்பிக்கபடவிருந்த நிலையில், அமெரிக்க பிரதி தலைவர் ஜே.டி. வான்ஸும் உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இன்று வரவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு மாநாட்டு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் (1 மைல்) தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...