2 43
உலகம்

வெளிநாடொன்றில் கொடூர கத்திக்குத்து : மூவர் பலி பலர் காயம் – பாரிய தேடுதல் வேட்டை

Share

வெளிநாடொன்றில் கொடூர கத்திக்குத்து : மூவர் பலி பலர் காயம் – பாரிய தேடுதல் வேட்டை

மேற்கு ஜேர்மனியின் சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்றையதினம் மாலை மேற்கு ஜெர்மனியின் சோலிங்கனில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், தொழில் நகரம் உருவாக்கப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நகரின் மையப் பகுதியில் நேற்றைய தினம் மாலை விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கு வந்த வீதிக்கு அருகில் இருந்த தாக்குதல்தாரி, அவ்வழியாகச் சென்றவர்களை கத்தியால் குத்திவிட்டு ஓடியதாகவும், இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தாக்குதலில் காயமடைந்தவர்களை பாதுகாப்பு படையினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிக்க அப் பகுதியில் பாரிய தேடுதல் வேட்டை நடந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த தேடுதல் நடவடிக்கை காரணமாக சோலிங்கனில் சாலைகள் தடைபட்டுள்ளன.

மேலும் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதால் குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 683cbdb82eb05
உலகம்செய்திகள்

அமெரிக்காவை பணயம் வைக்கும் நீதிமன்றின் உத்தரவு.. அச்சத்தில் ட்ரம்ப்

அமெரிக்கா பிற நாடுகள்மீது விதிக்கும் வரிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அது அமெரிக்காவை மற்ற...

25 683cbda46aae6
உலகம்செய்திகள்

நேட்டோவை குறிவைக்க காத்திருக்கும் ரஷ்யா..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முக்கிய அதிகாரி

2029ஆம் ஆண்டுக்குள் நேட்டோ நாடுகளின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என ஜெர்மனியின் தலைமை...

25 683cc8f812040
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் விம்ப்ளி சர்வதேச மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் உதைபந்தாட்ட வீரர்

விம்ப்ளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின்...

25 683c1f6f06326
உலகம்

எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது போதை பொருள்...