13 19
உலகம்செய்திகள்

விசா செயலாக்க நேரத்தை அதிரடியாக குறைத்துள்ள ஜேர்மனி

Share

விசா செயலாக்க நேரத்தை அதிரடியாக குறைத்துள்ள ஜேர்மனி

ஜேர்மனி(Germany) செல்வதற்கு ஆர்வமாக இருக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மன் விசா செயலாக்க நேரம் 9 மாதங்களிலிருந்து தற்போது வெறும் 2 வாரங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அனாலெனா பேர்பாக் தெரிவிக்கையில், “தேசிய விசாக்களுக்கான உலகின் மிகப்பாரிய விசா அலுவலகமாக ஜேர்மனியின் வெளியுறவுத்துறை உள்ளது. இங்கே திறமையான தொழிலாளர்கள் மிகவும் அவசரமாக தேவை” என்று கூறியுள்ளார்.

இந்தியர்கள் மத்தியில் ஜேர்மனி, அதிகமாக பிரபலமாகி வருகிறது. இதில் வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி, கல்வி நிலையங்களுக்காகவும் பிரபலமாக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில், ஜேர்மனியில் சேரும் இந்திய மாணவர்கள் 107% அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய நிபுணர்கள் ஜேர்மனி செல்வதற்கு, தங்கள் தகுதிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் மற்றும் அங்கு வேலைக்கு அழைப்பு பெற்றிருக்க வேண்டும்.

ஜேர்மனி செல்ல, ஒரு வருடம் கால அவகாசம் உள்ள கடவுச்சீட்டு , வேலை ஒப்பந்தம், மற்றும் பொருளாதார ஆதாரங்களைத் தயாரிக்க வேண்டும்.

இந்தியர்கள் ஜேர்மனி செல்வதற்கான செயல்முறைகள் மிகவும் எளிதானவையாக மாறியுள்ளதால், இது இந்திய தொழிநுட்ப நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு மேலும் ஒரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...