rtjy 88 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டம்: ஹமாஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது

Share

ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டம்: ஹமாஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது

ஜேர்மனியில் யூதர்கள் வாழும் இடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஜேர்மன் அதிகாரிகள் நடத்திய ரெய்டுகளில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதன் தொடர்ச்சியாக, ஜேர்மன் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், நெதர்லாந்து நாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் லெபனான் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தாக்குதல் நடத்த தயார் நிலையில்…
கைது செய்யப்பட்ட நான்குபேரும் நீண்ட காலமாக ஹமாஸ் அமைப்பில் உறுப்பினர்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவின் தலைவருடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த நான்கு பேரில் ஒருவரான Abdelhamid Al A என்பவருக்கு, லெபனானிலுள்ள ஹமாஸ் தலைவர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றின் பொறுப்பைக் கொடுத்துள்ளார்கள்.

அந்த ஆயுதங்களை ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்குக் கொண்டுவந்து, யூத அமைப்புகளுக்கெதிராக தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, அவற்றை தாக்குதலில் பயன்படுத்தும் வகையில் தயாராக வைத்திருக்க திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...