19 5
உலகம்செய்திகள்

நெருங்கும் தேர்தல்… அச்சத்தில் 90 சதவிகித ஜேர்மானிய மக்கள்: ஒரேயொரு காரணம்

Share

வெளிநாட்டு சக்திகளால் சமூக ஊடகங்கள் வழியாக நாடாளுமன்றத் தேர்தலில் செல்வாக்கு செலுத்த முடியும் என்ற அச்சத்தை 90 சதவிகித ஜேர்மானிய மக்கள் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இருந்து ஜேர்மானிய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகின்றனர்.

Bitkom என்ற அமைப்பு கடந்த மாதம் 1000 வாக்காளர்களிடம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் 45 சதவிகிதம் பேர்கள் ரஷ்யாவால் தேர்தல் சீர்குலைய வாய்ப்புள்ளதாக பதிவு செய்துள்ளனர். ஆனால் அமெரிக்காவும் முயற்சிகள் செய்யலாம் என 42 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா 26 சதவிகிதம் என்றும் கிழக்கு ஐரோப்பா 8 சதவிகிதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தகுதியுள்ள வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கு (69%) பேர்களுக்கு, பிப்ரவரி 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தல்கள் பற்றிய தகவல்களுக்கு இணையம் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

ஆனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உரையாடல்கள் தொடர்ந்து மிகவும் முக்கியமானவை என 82 சதவிகிதம் பேர்கள் தெரிவித்துள்ளனர். 75 வயதுக்கு மேற்பட்ட 76 சதவிகிதம் மக்கள் செய்தி ஊடகங்களே காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

பதிலளித்தவர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் புதிய அரசாங்கம் டிஜிட்டல் கொள்கையை அதன் முன்னுரிமைகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

மட்டுமின்றி, 71 சதவிகிதம் பேர்கள் புதிய, சுதந்திரமான டிஜிட்டல் அமைச்சகத்தை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டவரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க் ஜேர்மன் தீவிர வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...