24 6640422546132
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை முதல் பயனாளி மரணம்

Share

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை முதல் பயனாளி மரணம்

அமெரிக்காவில் (America) மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை வைத்தியர்களும் நேற்று (11) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேன் (Richard Rick Slayman) என்பவருக்கே கடந்த மார்ச் மாதம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பன்றி சிறுநீரகம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயற்படும் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக அவர் இறந்ததற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என்று நிபுணர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் 100,000இற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தேசிய காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் தவணை வருவதற்கு முன்பே இறந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...