tamilni 239 scaled
உலகம்செய்திகள்

காசா மக்கள் மழை நீரை குடிக்கும் அவலம்

Share

காசா மக்கள் மழை நீரை குடிக்கும் அவலம்

பாலஸ்தீனின் காசாவில் கனமழை பெய்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மழை நீரை சேகரித்து குடிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் ஐ.நாவின் தங்குமிடங்களிலும், தற்காலிக தங்குமிடங்கள் அமைத்தும் தங்கள் நாட்களை கடந்து வருகின்றனர்.

இந்நிலையில் மழைக்காலங்களில் காசாவில் பரவும் நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மற்றும் அவற்றில் போதிய வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்கிடையில் காசாவில் கனமழை வேறு பெய்து வருவதோடு இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காசாவில் இதே நிலை நீடித்தால், சுகாதார வசதிகள் மற்றும் தாங்க முடியாத குளிர் ஆகியவற்றினாலும் மக்கள் உயிரிழக்கும் மோசமான நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...