11 19
உலகம்செய்திகள்

காசா பாடசாலை மீது இஸ்ரேல் சரமாரி குண்டு தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு

Share

காசா பாடசாலை மீது இஸ்ரேல் சரமாரி குண்டு தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு

காசாவில் தற்காலிக குடியிருப்பாக மாற்றப்பட்ட பாடசாலை மீது நேற்று(20)இஸ்ரேலிய இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மஹ்மூத் பஸ்சல்(Mahmud Bassal) வழங்கிய தகவலில், காசா நகரின் மேற்கே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து குண்டு வீசி தாக்கப்பட்ட முஸ்தபா ஹபீஸ் பாடசாலையில்(Mustafa Hafiz school) இருந்து 12 பேரின் உடல்களை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ் படைகளின் உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு இஸ்ரேலிய படைகளுக்கு ஏதிரான தாக்குதலை முன்னெடுப்பதால் பாடசாலை குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலையில் இருந்து கொண்டு செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் மீது இதன்மூலம் துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

பாடசாலையின் இரண்டாவது தளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் படுகாயமடைந்ததாகவும் மஹ்மூத் பஸ்சல் முன்னதாக வழங்கிய தகவலில் தெரிவித்து இருந்தார்.

உயிரிப்புகளில் சரியான எண்ணிக்கை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...