tamilni 275 scaled
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல்

Share

காசா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல்

காசா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட போவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில் இவ்வாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடும் போராட்டத்திற்கு பின்னர் ராஃபா எல்லை திறந்துவிடப்பட்டுள்ளது. அத்துடன் காசா மக்களுக்கான 20 லொறி நிவாரண பொருட்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காசா பகுதி மக்களின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால், இந்த 20 லொறி நிவாரணம் என்பது கடலில் விழுந்த துளிக்கு சமம் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒரு துளி, வரும் நாட்களில் பாயும் உதவி நதியாக மாறும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உதவி பணியாளர்கள் குழு காசாவின் பேரழிவு நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

அக்டோபர் 7 முதல் கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குறைந்தது 1,782 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...