tamilni 123 scaled
உலகம்செய்திகள்

காஸா எல்லையை மீண்டும் கைப்பற்றிய இஸ்ரேல்!

Share

காஸா எல்லையை மீண்டும் கைப்பற்றிய இஸ்ரேல்!

காஸா எல்லையை இஸ்ரேல் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் பாலஸ்தீனியர்களுடனான மோதலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகக் கடுமையான வான்வழி தாக்குதல்களை நடத்துவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்த தாக்குதலில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும், நடன விருந்துகளிலும் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் காஸாவிற்கு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 700 காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 180,000 காஸா மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர், பலர் தெருக்களில் மற்றும் பாடசாலைகளில் குவிந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

காஸாவில் உள்ள கான் யூனிஸ் மருத்துவமனையில் உள்ள பிணவறை உடல்களால் நிரம்பி வழிகிறது என தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான எண்ணிக்கை கிடைக்கவில்லை மேலும், இறந்தவர்களின் உடல்களை வைக்க அதிக இடவசதி இல்லாததால், அவற்றை விரைந்து எடுத்துச் செல்லுமாறு உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஹமாஸ் தாக்குதலில் 6 பத்திரிகையாளர்கள் உள்ளடங்களாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், இஸ்ரேலில், சனிக்கிழமை நடந்த தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் முழுமையான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...