உலகம்செய்திகள்

காஸா மக்கள் இப்படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

Share

காஸா மக்கள் இப்படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக காஸாவில் பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளிர்காலம் நெருங்கி வருவதால், பாதுகாப்பற்ற மற்றும் நெரிசலான தங்குமிடங்கள் மற்றும் சுத்தமான தண்ணீர் இல்லாததால், பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என முதன்மை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பல வாரங்களாக எச்சரித்து வரும் இந்த ஐ.நா அமைப்பு, ரொட்டி தற்போது பற்றாக்குறையாக இருப்பதாகவும் அல்லது இல்லாது போன்ற நிலை இருப்பதாகவும், எஞ்சிய உணவால் தற்போதைய பசி தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னொரு பாதுகாப்பான வழித்தடம் உருவாக்குவதால் மட்டுமே காஸா மக்களின் உணவு பற்றாக்குறையை போக்க முடியும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை எகிப்தில் இருந்து வந்த டிரக்குகள் போதிய எரிபொருள் இல்லாததால் பொதுமக்களை சென்றடைய முடியாமல் போனதாகவும், எரிபொருள் பற்றாக்குறையும் உணவு விநியோகத்திற்கு தடையாக இருப்பதாக ஐ.நா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...