24 662308fb62d55
உலகம்செய்திகள்

இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து அதிரடி முடிவு

Share

இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து அதிரடி முடிவு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களை தணிக்க G7 நாடுகள் உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய தீவிரவாதிகளின் சார்பாக நிதி திரட்டும் இரண்டு அமைப்புகளின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் “தீவிரவாத குடியேற்றக்காரர்களுக்கு” அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய நகரமான இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மற்றும் இராணுவ தளத்திற்கு அருகில் இஸ்ரேல் நேற்று தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் இஸ்ரேல் தனது முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் என தெரிவித்த அடுத்த நாளே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் தமது நாடு மீது இஸ்ரேல் உண்மையில் தாக்குதல் நடத்தியதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இஸ்ரேல் மீது உடனடி தாக்குதல் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஈரானின் எல்லைப் பகுதியில் சிறிய வகை ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...