22 4
உலகம்செய்திகள்

எங்கள் நாட்டு அரசியலில் தலையிடாதீர்கள்: அமெரிக்காவுக்கு ஜேர்மனியின் புதிய தலைவர் எச்சரிக்கை

Share

ஜேர்மன் அரசியலில் தலையிடவேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்துள்ளார் ஜேர்மனியின் புதிய சேன்ஸலரான ப்ரெட்ரிக் மெர்ஸ்.

ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சியான BfV, வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, ஜேர்மன் உளவுத்துறையின் அறிக்கையை, அமெரிக்க மாகாணச் செயலரான மார்க்கோ ரூபியோ (Marco Rubio) கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஜேர்மனி, எதிர்க்கட்சிகளை கண்காணிக்க தனது உளவுத்துறைக்கு அதிகாரம் அளித்துள்ளது.

இது ஜனநாயகம் அல்ல, இது மாறுவேடத்திலிருக்கும் கொடுங்கோலாட்சி என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், ஜேர்மனியின் புதிய சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப்ரெட்ரிக் மெர்ஸ், ஜேர்மன் அரசியலில் தலையிடவேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்த மெர்ஸ், தான் தொலைபேசி வாயிலாக ட்ரம்பிடம் பேச இருப்பதாகவும், அமெரிக்காவை ஜேர்மன் அரசியலில் தலையிடாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தான் தலையிடவில்லை என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...